ஆம், நாங்கள் பைத்தியங்கள் தான் என்று அவர்களாகவே முன்வந்து ஒப்புக்கொண்டுள்ளனர் விஜய் ரசிகர்கள்.
அதிர்ச்சியாக இருக்கிறதா....? இதுதாங்க உண்மை.
கடந்த பிப்ரவரி 5ம் தேதி வெளியான அஜித்குமார் அவர்களின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் வசூல் வேட்டை நடத்திவருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. படம் வெளியான நாளான பிப்ரவரி 5 அன்று, நடிகர் சிம்பு தன்னுடை ட்விட்டர் பக்கத்தில் "மனநலம் குறைபாடு உள்ளவர்களுக்கு தான் என்னை அறிந்தால் படம் பிடிக்காது" என்று ட்வீட்டி இருந்தார்.
அவர் அவருடைய சொந்த கருத்தை வெளியிட்டுள்ளார், மற்றும் இது ஒரு பொதுவான கருத்து. யாரையும் சுட்டி காட்டி சொல்லவில்லை.
ஆனால், விஜய் ரசிகர்கள் இதற்க்கு எதிராக ஒரு பனிப்போர் நடத்தி வருகின்றனர்.
சிம்பு அவர்களின் கருத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில், அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் வாயாலேயே தம்பட்டம் அடித்து கொண்டிருகின்றனர். இப்படியான, காரியங்களில் ஈடுபடுவது ஒரு சில விஜய் ரசிகர்கள் தான். விஜயின் தீவிர ரசிகன், பக்தன் என்கிற போர்வையில் இவர்கள் மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பைத்தியக்காரன் பட்டம் சூட்டி கொண்டிருக்கின்றனர்.
அவர் மனநலம் பாதிக்கபட்டவர்களைதானே குறிப்பிட்ட சொன்னார். நமக்கு என்ன வந்தது? என்று பெரும்பான்மையான விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டுகொண்டிருக்க. அதெல்லாம், இந்த அதிதீவிர விஜய் ரசிகர்களின் காதில் விழுந்தபாடில்லை. இவர்கள் இப்படியான காரியங்களில் ஈடுபடுவது, வடிவேலு பாணியில், நான் ஜெயிலுக்கு போறேன்,
ஜெயிலுக்கு போறேன்,ஜெயிலுக்கு போறேன் என்பது போல் நாங்க பைத்தியங்கள் நாங்க பைத்தியங்கள் என்று தம்பட்டம் அடித்து கொண்டிருப்பது போல் இருக்கிறது.
இத சொன்னா என்னையும் பைத்தியக்காரன் என்று அவங்க லிஸ்டுல சேத்துருவாங்க. வேணாம்பா நான் சாதாரண விஜய் ரசிகனாகவே இருந்துட்டு போறேன்.
இப்படிக்கு - "எங்கள் தளபதி" விஜய் ரசிகன்
இந்த பதிவை சேர் செய்ய கீழே உள்ள சேர் பட்டனை அழுத்தவும்.
0 comments:
Post a Comment